செய்திகள்

இன்று நேர ஒதுக்கீடு தரிசனம், திவ்ய தரிசனம் ரத்து

தினமணி

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நேர ஒதுக்கீடு மற்றும் திவ்ய தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 கோடை விடுமுறை முடிந்தும் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார இறுதி விடுமுறை நாள்களில் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக 26 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இந்நிலையில், திருமலையில் போக சீனிவாசமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் தங்க வாயிலில் 3 மணிநேரத்துக்கு இந்த அபிஷேகம் நடத்தப்படும். எனவே அன்று நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கு அளிக்கப்படும் திவ்ய தரிசனத்தையும், தர்ம தரிசன பக்தர்களுக்காக வழங்கப்படும் நேர ஒதுக்கீட்டு தரிசனத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT