செய்திகள்

காளையார்கோவிலில் முத்துவடுகநாதரின் குருபூஜை விழா

தினமணி

சிவகங்கையை ஆட்சி செய்த மன்னர் முத்துவடுகநாதரின் 247-வது குரு பூஜை விழா, காளையர் கோவிலில் நடைபெற்றது.

காளையார்கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநிலச் செயலர் எஸ்.ஆர். தேவர், பாஜகவின் கோட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் காளையார்கோவிலில் உள்ள காளையீசர் சுவாமி கோயிலில் உள்ள முத்துவடுகநாதரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பின்னர், ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதையடுத்து, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில், காளையார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT