செய்திகள்

திருவண்ணாமலையில்  கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி


திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவனின் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாதந்தோறும் பௌர்ணமி அன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்  வருகின்றனர்.
இந்த நிலையில், பங்குனி மாதப் பௌர்ணமி புதன்கிழமை (மார்ச் 20) காலை 10.03 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை (மார்ச் 21) காலை 7.41மணிக்கு முடிகிறது. 
எனவே, பக்தர்கள் அந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT