செய்திகள்

பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோயிலில் நாளை தேரோட்டம்

தினமணி

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 13-ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 14-ம் தேதி பல்லக்கு அனுமந்த வாகனத்திலும், 15-ம் தேதி பல்லக்கு சேஷ வாகனத்திலும், 16-ம் தேதி உதய கருட சேவை, வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 17-ம் தேதி பல்லக்கு யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

திங்கள்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மதனகோபால சுவாமி. இதில், பெரம்பலூர் நகரைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. வெண்ணெய்த்தாழி உற்ஸவம், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.  

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நாளை (மார்ச் 20) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. 21-ம் தேதி காலை துவாதச ஆராதனம், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும், 22-ம் தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலா,  23-ம் தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவமும், 24-ம் தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றி விழாவும், 27-ம் தேதி 8ஆம் திருவிழாவையொட்டி, காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவு பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் வை. மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT