செய்திகள்

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா

தினமணி

மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த சனிக்கிழமை 23.3.19-ம் தேதி தொடங்கியது.

ஏப்ரல் 23-ம் தேதி வரை சுமார் ஒரு மாத காலம் நடைபெற உள்ள பங்குனிப் பெருவிழா மற்றும் விடையாற்றி கலைவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறையருள் பெற கோயிலின் நிர்வாக அதிகாரி இரா. சங்கீதா மற்றும் உதவி ஆணையர் ச. கிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளனர்.

மார்ச் 27-ம் தேதி வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜ அலங்கார சேவை, 31-ம் தேதி வண்ண புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்கார சேவை, ஏப்ரல் 2-ம் தேதி சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரம், 5-ம் தேதி தங்க கருட வாகனத்தில் இரட்டை குடை சேவை - வைகுண்டநாதன் சேவை, 7-ம் தேதி யானை வாகனத்தில் ராஜ அலங்காரமும் நடைபெற உள்ளது.

ஏப்ரல் 9-ம் தேதி நவநீத சேவை வெண்ணைத்தாழி உற்சவம், 10-ம் தேதி திருத்தேர் உற்சவம், கடைசி நாளான ஏப்ரல் 23-ம் தேதி கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT