செய்திகள்

பத்மாவதி பரிணய உற்சவம்: யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

DIN


திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவம் தொடங்கிய திங்கள்கிழமை, யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட வைபவத்தை திருமலையில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த உற்சவம் 3 நாள்களுக்கு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி பத்மாவதி பரிணய உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. 
இதற்காக திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் தசாவதார மண்டப வடிவம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றி அஷ்டலட்சுமி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் பல வகையான பழங்கள், மலர்கள், மின்விளக்குகள் உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதியாக அமர்ந்து பரிணய உற்சவத்தைக் காண தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. 
பரிணய உற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை மாலையில், மலைப்ப சுவாமி யானை வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் பல்லக்கிலும் கல்யாண மண்டபத்தை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு ஆராதனைகள், பட்டு வஸ்திரம் சமர்ப்பணம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை நடைபெற்றன. 
இரவில் உற்சவமூர்த்திகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பத்மாவதி பரிணய உற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது. 
5 டன் பழங்கள்: கல்யாண மண்டப வடிவத்தை அமைக்க ஒரு டன் மலர்கள், 25 ஆயிரம் உதிரி மலர்கள், 5 டன் பழங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்த நிபுணர்கள் 60 பேரும், தேவஸ்தான தோட்டக் கலைத் துறையைச் சேர்ந்த 60 பேரும் மண்டப அலங்காரப் பணியில் ஈடுபட்டனர். 
கல்யாண மண்டப வடிவத்தை அமைப்பதற்கான முழுச் செலவையும் சென்னையைச் சேர்ந்த பக்தர் வெங்கடாசலம் மற்றும் புணேவை சேர்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா அறக்கட்டளை நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டனர். கடந்த மாதம் 21-ஆம் தேதி கல்யாண மண்டப வடிவமைப்புப் பணிகள் தொடங்கின. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகையான பொருளைக் கொண்டு இந்த மண்டபம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT