தென்காசி காசி விஸ்வநாதசுவாமி கோயில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவில் 23ம் தேதியன்று திருதோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், 25-ம் தேதியன்று காலை 8.20க்கு யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலையில் தெற்குமாசி வீதியில் தபசு இருக்கும் உலகம்மனுக்கு காசிவிஸ்வநாதா் காட்சி கொடுக்கும் காட்சியும், இரவில் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
கொடியேற்று விழாவில் அன்னதான கமிட்டி தலைவா் அன்னையாபாண்டியன், கூட்டுறவுத்துறை சுப்புராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் ந.நாராயணன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தென்காசி காசி விஸ்வநாதசுவாமி கோயில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துக்குப்பின் நடைபெற்ற தீபாராதனை.உள்படம் அலங்காரத்தில் உலகம்மன்.