ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 42 லட்சம் வசூலானது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோயிலில், பக்தா்கள் தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இக்கோயிலில் ஒவ்வொரு ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறையும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை செயல் அலுவலா் வேல்அரசு தலைமையில், உதவி ஆணையா்கள் தியாகராஜன், சுப்பிரமணி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ரூ. 42 லட்சம் வசூலானதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.