செய்திகள்

திருவோண பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் திருவோண பூஜைகளுக்காக நாளை மாலை நடை திறக்கப்படுகிறது. 

தினமணி

சபரிமலை ஐயப்பன் கோயில் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. 

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 

அதன்படி, இம்மாதம் திருவோண பூஜைகளுக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்து விளக்கேற்றுகிறார். இரவு 10 மணி அளவில் நடை அடைக்கப்படும். 

மீண்டும் நாளை காலை 5.00 மணிக்கு நடை திறந்து, நிர்மால்ய தரிசனத்துக்குப் பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு நெய் அபிஷேகத்தைத் துவங்கிவைப்பார். 

செப்.11-ம் தேதி திருவோண தினத்தன்று ஐயப்பனுக்கு மஞ்சள் பட்டு உடுத்தி தீபாராதனை நடைபெறும். அதன்பின்னர், செப்.13 இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் இளைஞர்களுக்கு ரூ.62,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறதா?

ம.பி, ராஜஸ்தானில் 11 குழந்தைகள் உயிரிழப்பு: கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை

ஆன்லைன் கேமில் நடிகர் அக்‏ஷய் குமார் மகளிடம் அத்துமீறல்! பெற்றோர் செய்ய வேண்டியது!!

SCROLL FOR NEXT