செய்திகள்

சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

DIN


அரக்கோணம் பஜார், திருமலை-திருப்பதி பாதயாத்திரை குழுவினர் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் பஜார், திருமலை-திருப்பதி பாதயாத்திரை குழுவினர் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அரக்கோணத்தில் இருந்து திருப்பதி-திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு இக்குழுவினர் சனிக்கிழமை (செப்டம்பர் 21) பாதயாத்திரையாக திருமலைக்குப் புறப்பட உள்ளனர். இந்நிகழ்வை முன்னிட்டு, அரக்கோணம் பஜார், வரசித்தி விநாயகர் கோயில் முன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. 
விழா ஏற்பாடுகளை அரக்கோணம் பஜார், திருமலை-திருப்பதி பாதயாத்திரை குழுத் தலைவர் ஹரி, வரசித்தி விநாயகர் கோயில் அறங்காவலர் கோபண்ணா ரவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT