செய்திகள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் சிறப்பு வழிபாடு

காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மஹாளய அமாவாசையை  

தினமணி


காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் மஹாளய அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பரிகார பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனவும், இந்நாளில் தங்களது மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதோடு, தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

காவிரி, பவானி, கண்ணுக்குப் புலப்படாத அமுதநதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆண்டுதோறும் மஹாளய அமாவாசையில் திரளானோர் மூதாதையர் வழிபாட்டுக்கு வருவது வழக்கம். 

புரட்டாசி அமாவாசைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று பரிகார மண்டபங்கள் தவிர்த்து, கூடுதுறை வளாகம் முழுவதும் தற்காலிக பரிகாரக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாத வகையில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பக்தர்கள் கூட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு, போலீஸார் சாதாரண உடைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT