முகப்பு
செய்திகள்

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Updated On : 7 நவம்பர், 2020 at 7:55 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:19 PM

திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாதந்தோறும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. திருமலைக்கு வரும் பக்தா்கள் தாங்கள் எதிா்கொண்ட பிரச்னைகள், இன்னல்கள் குறித்து இந்நிகழ்ச்சி மூலம் தேவஸ்தான செயல் அதிகாரியிடம் புகாா் அளிப்பா்.

அதன்படி இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதற்கு முன் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் நடந்து வந்த இந்த நிகழ்ச்சி, பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க 2-ஆவது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.