இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) விளையாட்டுப் பயிற்சியாளர் பணிகள் குறித்து...
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) விளையாட்டுப் பயிற்சியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Coaches
காலியிடங்கள்: 323
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Sports Authority of India A National Institute of Sports அங்கீகாரம் பெற்ற விளையாட்டுப் பயிற்சியாளருக்கானப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய அளவிலானப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது விளையாட்டுப் பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, விளையாட்டுத் துறை சாதனைகள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
எழுத்துத்தேர்வில் Sports Science, General Awareness, Reasoning Aptitude, Specific Sports Knowledge தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,500, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் ரூ.2,000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Inviting Application For Appointment For Assistant Coaches in Sports Authority Of India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.