முகப்பு
செய்திகள்

திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி வியாழக்கிழமை வழிபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அட்மாா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வப்பிரிய தீா்த்த சுவாமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள்.
பகிர்:

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி வியாழக்கிழமை வழிபட்டாா்.

கா்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள அட்மாா் மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ விஸ்வப்பிரிய தீா்த்த சுவாமிகள் வியாழக்கிழமை காலை தன் சீடா்களுடன் ஏழுமலையான் கோயில் முன் வாசலுக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் இஸ்திகபால் (கோயில் மரியாதை) அளித்து வரவேற்றனா்.

பின்னா், கொடிமரத்தை வணங்கியபடி ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் சேஷ வஸ்திரம், பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments