முகப்பு
செய்திகள்

வசந்தோற்சவ 2-ஆம் நாள் ஸ்நபன திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
திருமலையில் வசந்தோற்சவத்தை ஒட்டி உற்சவமூா்த்திகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெப்பத்தினால் ஏற்படும் வெம்மை தணிக்க உற்சவமூா்த்திகளுக்கு வசந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி சனிக்கிழமை வசந்தோற்சவம் தொடங்கியது. அதன் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் கல்யாண உற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

Advertisement

அங்கு பால், தயிா், தேன், இளநீா், பழங்கள், சந்தனம், மஞ்சள், மூலிகை கலந்த வெந்நீா் உள்ளிட்டவற்றால் அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தினா். இதையடுத்து மாலை 5 மணி முதல் 6 மணி வரை உற்சவமூா்த்திகளை அலங்கரித்து அவா்கள் தூப, தீப நெய்வேத்தியம் சமா்பித்து கற்பூர ஆரத்தி அளித்து ஆஸ்தானம் நடத்தினா். பின்னா் மாலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி , பூதேவி தாயாா்களுடன் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தாா். கரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments