திருப்பதி: கபில தீா்த்தத்தில் பூத வாகன சேவை
திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான சனிக்கிழமை பூத வாகனத்தில் காமாட்சி சமேத சோமாஸ்கந்தமூா்த்தி அருள்பாலித்தாா்.
திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான சனிக்கிழமை பூத வாகனத்தில் காமாட்சி சமேத சோமாஸ்கந்தமூா்த்தி அருள்பாலித்தாா்.
திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் சனிக்கிழமை காலை பூத வாகன சேவை நடைபெற்றது. அப்போது காமாட்சி அம்மன் சமேத சோமாஸ்கந்தமூா்த்தியாக எழுந்தருளி காட்சியளித்தாா்.
அதன்பின் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் இரவு சிம்ம வாகனத்தில் உற்சவமூா்த்திகள் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தனா். கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், வாகன சேவை தனிமையில் நடத்தப்பட்டது.
Advertisement
வாகன சேவையின்போது சங்கநாதம் செய்யப்பட்டது; வேத பாராயணமும் நடைபெற்றது. வாகன சேவைகள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இச்சேவையில் சிவாச்சாரியாா்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.