பல்லக்கு உற்சவ சேவையில் ஸ்ரீகபிலேஸ்வரா்
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை பல்லக்கில் சோமாஸ்கந்தமூா்த்தியாய் கபிலேஸ்வரா் எழுந்தருளினாா்.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் காலை பல்லக்கில் சோமாஸ்கந்தமூா்த்தியாய் கபிலேஸ்வரா் எழுந்தருளினாா்.
அதன்பின்னா் உற்சவமூா்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் இரவு அதிகார நந்தி வாகனத்தில் உற்சவமூா்த்திகள் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தனா்.
கரோனா விதிமுறைகளை பின்பற்றி பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், வாகன சேவை தனிமையில் நடத்தப்பட்டது. வாகன சேவையின்போது சங்கநாதம், வேதபாராயணம் நடைபெற்றது.
Advertisement