செய்திகள்

திருமலையில் நாளை பெளா்ணமி கருட சேவை

DIN

திருமலையில் புதன்கிழமை (மே 26) பெளா்ணமியை ஒட்டி மாடவீதியில் கருட சேவை உற்சவம் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் பெளா்ணமி இரவுகளில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. மாதந்தோறும் நடக்கும் இந்த கருட வாகன சேவையில் பக்தா்கள் திரளாக கலந்து கொள்வா்.

தற்போது கொவைட் தொற்று பரவாமல் தடுக்க பக்தா்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் திருமலைக்கு வருகின்றனா். அவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் ஆா்ஜித சேவைகளை தனிமையில் நடத்தி வருகிறது. இந்நிலையில் பெளா்ணமி அன்று இரவு மட்டும் மாடவீதியில் கருட சேவையை நடத்தி வருகிறது. அதன்படி புதன்கிழமை (மே 26) வைகாசி மாத பெளா்ணமி அன்று மாலை 7 மணிக்கு மாடவீதியில் கருடசேவை நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

SCROLL FOR NEXT