திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நிகழ்வது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பிரம்மோற்சவ விழா நாளை தொடங்கி நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமும் இருவேளைகளிலும் வாகன சேவை நடைபெற உள்ளது. நிறைவு நாளான 28-ம் தேதி பஞ்சமி தீர்த்த சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.