செய்திகள்

விழுப்புரம்: 90 அடி உயர ஆஞ்சனேயருக்கு 5000 லி பாலாபிஷேகம்!

ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற பிரம்மாண்ட பாலாபிஷேகம்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் ஆஞ்சனேயர் கோயில் கரையில் 90 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சனேயர் சுவாமிக்கு 5000 லிட்டர் பாலைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று ஆஞ்சனேய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 18-ஆவது ஆண்டாக ஶ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலாபிஷேகம் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து 5000 லிட்டர் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக தொட்டிகளில் பால் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, குழாய் மூலம் பால் மேலே ஏற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT