செய்திகள்

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

வரலாற்று நிகழ்வான, திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா நடைபெற்றது.

DIN

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரரை வணங்கி அருள்பெற திருப்பராய்த்துறையிலிருந்து வந்து கொண்டிருந்த அப்பர் சுவாமிகள் நீர் வேட்கையாலும், பசியினாலும் களைப்புற்றிருந்ததை அறிந்த ஞீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் பொதி சோற்றுடன் எதிர்கொண்டு அப்பர் முன் தோன்றி திருக்கட்ட முது அளித்தருளிய விழா கட்டமுதுபெருவிழா.

திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து அப்பர் பெருமான், ஞீலி வனேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, திருக்கோயிலிலிருந்து அப்பர் கட்டமுது வழங்கிய இடத்திற்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க சென்றடைந்தது.

தொடர்ந்து, திருமுறைகள் பாடப்பட்டு அப்பர் பெருமானுக்கு கட்டமுது வழங்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT