வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா
வரலாற்று நிகழ்வான, திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா நடைபெற்றது.
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரரை வணங்கி அருள்பெற திருப்பராய்த்துறையிலிருந்து வந்து கொண்டிருந்த அப்பர் சுவாமிகள் நீர் வேட்கையாலும், பசியினாலும் களைப்புற்றிருந்ததை அறிந்த ஞீலிவனேஸ்வரர் திருநீற்று அந்தணராய் பொதி சோற்றுடன் எதிர்கொண்டு அப்பர் முன் தோன்றி திருக்கட்ட முது அளித்தருளிய விழா கட்டமுதுபெருவிழா.
திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து அப்பர் பெருமான், ஞீலி வனேஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, திருக்கோயிலிலிருந்து அப்பர் கட்டமுது வழங்கிய இடத்திற்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க சென்றடைந்தது.
தொடர்ந்து, திருமுறைகள் பாடப்பட்டு அப்பர் பெருமானுக்கு கட்டமுது வழங்கப்பட்டு மஹா தீபாரதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.