செய்திகள்

வீர மகாகாளியம்மன் கோயிலில் திருநடனத் திருவிழா: திரளானோர் பங்கேற்பு!

56-ஆம் ஆண்டு திருநடனத் திருவிழாவில் பலர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

DIN

வீர மகாகாளியம்மன் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா, படுகளம் பார்த்தல் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையில் வீரமகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு 56-ஆம் ஆண்டு திருநடன திருவிழா மற்றும் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக

கணபதி ஹோமம், அக்னி எல்லை வலம் வருதல், கரகம் காவடி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வீரமகா காளியம்மன் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி கோயில் அருகில் உள்ள மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. வீதிகளில் நடனமாடி வந்த காளியம்மனை அப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்களில் அமரவைத்து பழங்கள் இளநீர் மாவிளக்கு வைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT