திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!
பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார்.
பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார். மற்றொரு பக்தர் வைரங்கள் மற்றும் வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்யாண் ராமன் கிருஷ்ணமூர்த்தி என்ற பக்தர் அளித்த நன்கொடையானது, ஏழுமலையான் மலைக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக இலவச உணவு வழங்கப்படுகிறது.
பக்தர் அளித்த வரவோலையைத் திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல், பெங்களூரைச் சேர்ந்த மூர்த்தி, ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 148 கிராம் எடையுள்ள வைரம் மற்றும் வைஜயந்தி பதித்த தங்க லட்சுமி பதக்கத்தை நன்கொடையாக வழங்கினார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் வெங்கையா சௌத்ரியிடம் அவர் அந்த ஆபரணத்தை ஒப்படைத்தார்.
A Bengaluru devotee donated Rs 1 crore to the Sri Venkateswara Anna Prasadam Trust and another devotee gave a golden Lakshmi pendant embedded with diamonds and Vyjayanthi stones to Lord Venkateswara on Wednesday, the temple authorities said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.