ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகாரகோயில் சித்திரை தேரோட்டம் 
செய்திகள்

ஆலங்குடி குருபரிகார கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

ஆலங்குடி கோயிலில் குருபரிகார சித்திரைத் தேரோட்டம் விமரிசை..

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் திருத்தேரோட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருத்தேரில் குரு பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக்கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு உடையது. நவகிரகங்களில் குரு பகவானுக்குப் பரிகார தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா அதி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருத்தேரில் எழுந்தருளிய குருபகவான்

விழாவில் ஒன்பதாம் நாளான திருத்தேர் திருவிழா நடைபெற்றது. திருத்தேரில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் குருபகவான் வழிபட்டனர். கோயில் செயல் அலுவலர் சுரேஷ் ,தக்கார் சொரிமுத்து, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திரளான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு ஆராதனைகளை ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

கிராமிய வாத்தியங்கள், நாதஸ்வர இன்னிசை முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்த திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேவார பேராசிரியர் குமாரவயலூர் திருஞான.பாலசந்தர்ஓதுவார் குழுவினரின் பண்ணிசை தேவாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT