கடந்த மார்ச் 23-ஆம் தேதி கொரட்டூர் பகுதியில் ஸ்மார்ட் கார்டுக்கு சரிபார்ப்புப் பணிக்காக சில ஊழியர்கள் வந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதமே அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அரசு அலுவலகங்களில் கையாளப்படும் தொழில் நுட்பக் கருவிகள் சரியான முறையில் இயங்காததால் பெரும்பாலானவர்களின் விவரங்கள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்றனர். எனவே பெரும்பாலானவர்கள் காத்திருந்து விவரங்களைப் பதிவு செய்தனர். இதனால் அனைவருக்கும் தேவையில்லாமல் நேர விரயம் ஏற்பட்டது. அதிகாரிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
எஸ்.ஞானமூர்த்தி, கொரட்டூர்.