ஆவடி பெருநகராட்சியின் கீழ்வாக்கூடி ஆவடி பழைய பஜார் சாலையின் இருபக்கமும் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதில் வலது பக்க கால்வாய் மீது கடைகளையொட்டிய நடைபாதை மீது கான்கிரீட் போடப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல இடது பக்க கால்வாயில் பாதி வரை கான்கிரீட் போட்டு மூடியுள்ளனர். இந்தப் பகுதியில் கால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளாலும், இதர குப்பையாலும் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு சுகாதாரக் கேடு நிலவுகிறது. எனவே அடிக்கடி இந்த கால்வாய்களை சுத்தம் செய்யவேண்டும். இதுதொடர்பாக ஆவடி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செ. பழனி, ஆவடி.