கோடம்பாக்கம், பழவந்தாங்கல், தாம்பரம், சானிடோரியம் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ளது போலவே பெருங்களத்தூர் ரயில் நிலையத்திலும் 3 மற்றும் 4-ஆம் நடைமேடைகளில் பயணச் சீட்டு கவுண்டர் அமைக்க வேண்டும். தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதால், இந்த ரயில் நிலையத்தில் கூடுதல் பயணச் சீட்டு கவுன்ட்டரை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வி.ல.கணபதி, பழைய பெருங்களத்தூர்.