ஆவடி காவல் நிலையம் அருகில் திருமலைராஜபுரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளதால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு, இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் திருமலைராஜபுரத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களும், வணிக நிறுவனங்களும் அவதிப்படுகின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றித் தருமாறு மின்சார வாரியத்தை கேட்டுக் கொள்கிறோம்.
கே.கனகவேல், ஆவடி.