சென்னையில் உள்ள பழுதடைந்த சாலைகள், எரியாத சாலை விளக்குகள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பை ஆகியவற்றை சீர்செய்ய பெருநகராட்சியில் 1913 என்ற புகார் அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை பொதுமக்கள் அழைத்தால், அழைப்பு ஒலி வெகுநேரம் ஒலித்தாலும் எடுப்பதில்லை. சென்னை அண்ணாநகர் அருகே
நடுவங்கரை மேம்பாலத்தில் உள்ள விளக்குகள் எரிந்து பல மாதங்கள் ஆகின்றன. இதுதொடர்பாக புகார் தெரிவிக்க 1913 அழைப்பு எண்ணுக்கு அழைத்
தால் எடுப்பதில்லை. இந்த எண் முறையாகச் செயல்பட பெருநகராட்சி
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோதை ஜெயராமன், மீஞ்சூர்.