ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தம் தேவை

DIN

சென்னை மாநகரப் பேருந்துகள் 49ஏ, 11எம், கே.கே.நகர் வழியாக, பூந்தமல்லி, அய்யப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. திரும்பி வரும் போது விருகம்பாக்கம் மார்க்கெட், ஆர்க்காடு சாலையிலுள்ள ஏ.வி.எம் ஆவிச்சி பள்ளி, பேருந்து நிறுத்தத்தில் நின்று விட்டு மீண்டும் கே.கே.நகர் ராஜமன்னார் சாலை வழியாக முனுசாமி சாலை பஸ் நிறுத்தத்தில் நிற்கிறது. இதனால் அய்யாவு புரம், நவரத்னா காலனி, விஜயராகவாபுரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்கள் அன்னை சத்யா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அன்னை சத்யா மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எம்.சாமி, கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT