ஆவடி நகராட்சி 8-ஆவது வார்டு சரஸ்வதி நகரில் பொதுமக்கள் வசதிக்காக பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் போடப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அப்புறப்படுத்தாததால், குப்பைகள் பல இடங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை உடனடியாக எடுக்க ஆவடி நகராட்சி அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
- எஸ்.கனகராஜ், அம்பத்தூர்.