சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் மாடுகள் திரிகின்றன. ஆங்காங்கே மாட்டு சாணத்தைப் போட்டு மக்கள் வழுக்கி விழுகின்றனர். சில நேரங்களில் பேருந்துகள், வாகனங்களுக்கு இடையூறாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை எழுதி அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மாடுகளைப் பாதுகாக்க தொழுவங்களைத் திறக்க ஆவன செய்ய வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன், சென்னை.