அடையாறு இந்திரா நகரிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு கழிப்பறை வசதி இல்லாததால், பயணிகள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் அவதிப்படுகின்றனர். இதன் அருகில் உள்ள நம்ம டாய்லெட்டும் முறையாகப் பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பயணிகள் நலன்கருதி இந்த கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்.
- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.