சென்னை மண்ணடியில் உள்ள மூர் தெரு பகுதி முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனைச் சீரமைக்க பெருநகர மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும்.
எம்.அகமது அமீன், மண்ணடி.