சென்னை தோமையர் மலை ஒன்றியத்துக்குள்பட்ட பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நூற்றுக்கணக்கான நாய்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட பல்வேறு தரப்பினரும் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே, நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.