அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பாடியிலுள்ள பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் மரம், செடிகளுடன் குப்பைக் குவியலாகவும் உள்ளதால், கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறிவிட்டது. பல நாள்களாக கொசு மருந்து தெளிக்காததால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லதா நாகப்பன், பாடி.