அரசுப் பேருந்து வசதி வேண்டும்...
ராணிப்பேட்டையை அடுத்த முகுந்தராயபுரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. பெல் தொழிற்சாலைக்கும், பெல் ஊரக குடியிருப்பு வளாகத்துக்கும் இடையே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சுற்று வட்டார கிராம மக்கள், பெல் பணியாளா்கள் சென்று வருகின்றனா். ரயில் நிலையத்துக்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக காலை, மாலை நேரங்களில் ராணிப்பேட்டை-காட்பாடி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசண்முகம், நரசிங்கபுரம்.