மனோலய அனுபூதி—மனம் ஒடுங்கிய சமாதி அனுபூதி—நிலையை வேண்டுகின்ற இந்தப் பாடல் விராலி மலைக்கு உரியது.
அடிக்கு ஒற்றொழித்து 33 எழுத்துகளைக் கொண்ட பாடல். இப்பாடலில் ஒன்று முதல் ஐந்து வரை எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கெழுத்துகளும்; ஒவ்வொரு சீரிலும் இரண்டாம் எழுத்து நெடிலாகவும்; ஆறாம் சீரில் இரண்டாமெழுத்து நெடிலாக அமைந்திருப்பினும் இதில் மட்டும் ஐந்தெழுத்துகளும் பயில்வதைக் காணலாம்.
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ னெனஏய
சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர னருள்பாலா
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
வியாதர்கள் விநோதமகள் மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை பெருமாளே.