தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 676

ஹரி கிருஷ்ணன்

திருவடியை நினைக்கவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் கதிர்காமத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட சிறிய வடிவம்.  முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; மூன்றாம் சீரில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு ஒற்றெழுத்தும்; தொங்கல் சீரில் எப்போதும் போல நான்கெழுத்துகளும் அமைந்து இரட்டித்துள்ளன.

தனன தான தத்த                         தனதான 

எதிரி லாத பத்தி                          தனைமேவி
      இனிய தாள்நி னைப்பை             யிருபோதும்

இதய வாரி திக்கு                         ளுறவாகி
      எனது ளேசி றக்க                   அருள்வாயே

கதிர காம வெற்பி                         லுறைவோனே
      கனக மேரு வொத்த                புயவீரா

மதுர வாணி யுற்ற                        கழலோனே
      வழுதி கூனி மிர்த்த                 பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT