கவிதைமணி

மழைநீர் போல: -கோ. மன்றவாணன்

கவிதைமணி

அன்னப்பறவை ஆகவில்லை நான்
தண்ணீரை நீக்கிவிட்டுப்
பால்மட்டும் பருக

நீதிப்பறவை ஆகவில்லை நான்
மெய்யெது பொய்யெது
என அறிய

உள்மனநோக்குப் பறவை ஆகவில்லை நான்
முகமூடிகளே நிறைந்த உலகில்
நல்ல நட்பைக் காண

வஞ்சத்தால் கொழுத்துக் கிடக்கிறது
பூமியின்
ஒவ்வோர் அணுவும்

தீராத ஆசை
பூமியைத் தொடாமலே
புதியதோர் வாழ்வு காண

அடங்காத வேட்கை
மண்ணைத் தொடுவதற்கு முன்பே
மழைநீர் அருந்த

அமுதம் வேறேது?
நிலம்சேரும் முன்பே அருந்தும்
மழைநீர் போல

கனவு காணுகிறேன்
கருவாக...
சக்கரவாகப் பறவையின் முட்டையில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT