கவிதைமணி

அரியாசனம்:  பொன். குமார்

கவிதைமணி

அரியா சனங்கள்
அமர்வதற்கு
வாய்ப்பே தருவதில்லை
அரியாசனம்.

அமர்வர்கள்
நல்லவராவென 
அறிவதில்லை
அரியாசனம்.

அரியாசனத்தில்
அமர வைப்பவர்கள்
அரியா சனங்கள்.

அரியா சனங்களை
அலட்சியப்படுத்துகின்றன
அரியாசனங்கள்.

அரியாசனங்களுக்கு
ஆசைப் படுபவர்கள்
உடன் இருப்பவர்களையும்
உதற தயங்குவதில்லை.

அப்பன் மகனையும்
அண்ணன் தம்பியையும்
பிரித்தாளும் ஆற்றல் பெற்றது
அரியாசனம்.

இருப்பவரையும் நிரந்தரமாக
இருக்க  விடுவதில்லை
அரியாசனம்.

எல்லோரும் போட்டியிட்டாலும்
ஒருவரே அமரக்கூடியதாக உள்ளது
அரியாசனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT