கவிதைமணி

எதிர்காலம் ! கவிஞர் இரா .இரவி !

கவிதைமணி

எதிர்காலம் பற்றிய கவலையில் பலர் 
நிகழ்காலத்தை வீணடித்து வருகின்றனர் !

இன்று நன்றாக வாழப் பழகு மானிடனே 
இந்த நிமிடம் கழியட்டும் நன்றே !

எதிர்காலம் எதிர்காலம் என்று சொல்லியே 
இனிய குழந்தைகளின் மகிழ்வை அழிக்காதீர்கள் ! 

நாளை என்பது உறுதி இல்லை ஆனால் 
நாளும் இன்று என்பதே இனிமையாகும் !

இந்த நொடியை இந்த நிமிடத்தை 
இனிமையாக்கு இனிமை நாளையும் தொடரும் !

நாளைய கனவிலேயே பலர் இன்று 
நாளை வீணாய்  கழித்து வருகின்றனர் !

இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை 
என்பது வாழ்வியல்  கண்ட உண்மை !

இன்றே  வாழ்நாளில் கடைசி என்று எண்ணி 
இனி ஒவ்வொரு நாளும் வாழ்ந்து பழகு !

உனக்கான தன்னல வாழ்வு வாழ்வல்ல 
ஊருக்காகவும் வாழ்ந்து பழகு இனிக்கும் !

உதவ எண்ணினால் நாளை என்று 
ஒதுங்காமல் இன்றே நன்றே செய்திடு !

இறந்த பின்னும் நீ வாழ விரும்பினால்
இன்றே நன்று  செய்து வாழ்வாங்கு வாழ் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT