கவிதைமணி

விடுதலை: ஜனனி விவேகானந்தன்

கவிதைமணி

பிறந்த குழந்தைக்கு
இருட்டிலிருந்து விடுதலை..
பிறவிக் குருடனுக்கு
வெளிச்சத்திலிருந்து விடுதலை..

உணவு கிடைத்தவனுக்கு
பசியிலிருந்து விடுதலை..
உறவுகள் கிடைத்தவனுக்கு
பயத்திலிருந்து விடுதலை..

வார இறுதியில்
வேலையிலிருந்து விடுதலை..
வயது முதிர்வதற்குள் திருமணம் செய்தால்
வதந்தியிலிருந்து விடுதலை..

கல்லூரி இறுதியில்
கற்றலுக்கு விடுதலை..
காதலில் விழுகையில்
கனவுகளுக்கு விடுதலை..

மனைவி ஊர் சென்றால்
கணவனுக்கு விடுதலை..
மருமகள் வீடு வந்தால்
மாமியாருக்கு விடுதலை..

உறக்கத்தில் இருப்பவனுக்கு
உண்மை நிலையிலிருந்து விடுதலை..
உயிர் பிரியும் தருணத்தில் 
உலகிலிருந்தே விடுதலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT