கவிதைமணி

வீர மங்கை: சசி எழில்மணி

கவிதைமணி

மரபிலே புதையுண்ட
வீரத்தை
நெஞ்சிலே உரமாய்
சேர்த்து வைப்பாள்

தாயாக ஆனபின்
சேய்க்கு உணவாக
பாலுடன் வீரத்தை
ஊட்டி வளர்ப்பாள்

நாட்டிற்கொரு கேடென்றால்
ஈன்றெடுத்த மகவை
போருக்கு அனுப்பி வைப்பாள்

நெஞ்சிலே வேல் பாய்ந்தால்
ஏற்றம் கண்டு மகிழ்வாள்
புறமுதுகிட்டாள்
காரி உமிழ்வால்

எதிர்த்து வரும் புலியைக்கூட
முறம் கொண்டு விரட்டுவாள்

முத்தமிழ் பால்குடித்த மூத்தவள்
சங்கத்தமிழாலே சந்ததியை வளர்த்தவள்
பயமென்பதை முளையிலேயே
கிள்ளி எரிபவள்
தமிழ்ப் பெண்ணல்லோ
வீர மங்கை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT