கவிதைமணி

நிழல் தேடி: வேலூர் மூ.மோகன்

கவிதைமணி

பெற்ற மனம் பூரிக்க
பத்து பொருத்தமுடன் 
பந்தலை வலம் வந்த காலம்
பகற் கனவாய் போய்விட - 
'கை-பேசி' துணையோடு வெறும்
கண் பேசும் வார்த்தையில்
காதலெனும் கானல் நீரில்
நிஜங்களைத் தொலைத்து...
நிழல்களைத் தொடர்கிறோம்!

நெஞ்சம் நிறைந்த ஆசியோடு
அட்சதை தூவி மகிழ்ந்தது
அத்தனையும் மறந்துபோய்...
வெறும் கடமைக்கு 'வரவேற்பில்'
'வாழ்த்து-உறை' கொடுத்து
விடுப்பு இல்லையெனச் சொல்லி
விருந்துக்கு முந்துவதில்
'கின்னஸ்' சாதனை படைக்கும்
 'கில்லாடி'களாய் ஆனோம்!

வீட்டுக்கு புது வரவு வந்ததும்
விழுதுகளோடு விளையாடி
விக்கிரமதித்தன் கதை பேசிய
வம்ச விருட்சங்களையெல்லாம்
வேரோடு பெயர்த்தெடுத்து
வெந்நீரால் வளர்க்கின்றோம்
முதியோர் இல்லத்தில்!

வேரோடு விழுதுக்கிருந்த பந்தம்
வெறும் கனவாய்ப் போய்விட -
யாரோடு உறவாடும் நம் 
எதிர்கால சொந்தம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT