கவிதைமணி

குழந்தையின் குரல்:  முத்துலெட்சுமி

கவிதைமணி

உன்னிடம்
இடம்பெயர்த்துவிட்ட பிறகு
மௌனமாய்
நீ என்னைக் கடந்து செல்லும்
கன நேரத்திற்காய்
கடிகாரத்துடன் என்னைப்
பிணைத்துக் கொள்கிறேன்.
சுண்டுவிரல் பிடித்து
நடைபழகும் குழந்தையின்
வினோத கேள்வியொன்றிற்கு
விடைதேடும் தகப்பனைப்போல
உன் உதட்டுச் சுழிப்பிற்கு
அர்த்தம் தேடுகிறேன்.
தூரம் சென்று
திரும்பிப் பார்த்த - உன்
தோழிகள்
ஏதோ சொல்லி - நீ
வெட்கப்பட்டுச் சிவந்ததை
இயல்பாக நடந்ததாக
ஏற்க மனமில்லை
அந்தக் கடைசி நாளின்
நண்பர்கள் கூட்டத்தில்
என்பெயர் உச்சரிக்க நேர்கையில்
உன் குரல் உடைந்து
கண்மை கலைந்ததற்கு
நீ
என்ன சமாதானம்
சொன்ன போதும்
ஏற்கத் தயாராயில்லை
நான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT