பிஞ்சு மனங்களும்செல்ல மழையும்என்றும் பூமிக்குப் புதிது!மண்ணுக்கு புதுவரவு மழைமனிதனுக்கு புதுவரவு மழலைபுதிது புதுதை ரசிக்கும்குதூகலத்தில் மழையும் மழலையும்!பிஞ்சு மனங்களும்செல்ல மழையும்பூமிக்கு வந்த புதுக்கவிதை!பிஞ்சு மனமும்செல்ல மழையும்கிடைத்தவருக்கு ஊக்கம்!கிடைக்காதவர்க்கு ஏக்கம்!உள்ளத்தை நிரப்பபிஞ்சு மழலைகள்!பள்ளத்தை நிரப்பசெல்ல மழைகள்!மனிதன் மழையில்நனையாமல் இருக்ககுடை பிடிப்பான்!மழலை மழையில் நனையஅடம் பிடிக்கும்!நனைந்த பின்புசளி பிடிக்கும்!மழலைக்குமழையில் நனைந்தால்காய்ச்சல் வரும்!மண்ணுக்கு மழையில் நனையாததால்காய்ச்சல் வரும்!மழை வந்தால்குளம் செழிக்கும்!மழலை வந்தால்குலம் செழிக்கும்!மழையும் மழலையும் வந்தால்மனித வாழ்வே செழிக்கும்!