கவிதைமணி

வஞ்சம் செய்வாரோடு: கவிஞர் கு. அசோகன்

கவிதைமணி

வஞ்சம் செய்வார்தனை வேண்டி
நட்பு கொள்ளாதடி கிளியே!
 கொஞ்சியே பேசிடுவார் !

குணக்குன்று நீயென்பார் !
மஞ்சத்து மல்லிகைப் போல
மனதார சிரிப்பதாக
மாய்மாலம் காட்டிடுவார்

வஞ்சம் செய்வாரோடு
இணக்கம் கொள்ளாதடி கிளியே!
துஞ்சும் விழிகளிடையே
இமைபோல நானென்பார்
வஞ்சக எண்ணத்தையே
நெஞ்சுக்குள் பதுக்கியே
செந்தேனாய் சொல்வாரடி!

கடுக்கென கோபம் கொண்டால்
கயவரென எண்ணாதடி கிளியே!
தடுக்கிவிழும் வேளையிலே
தாங்கி பிடிப்பவர் இவர்தானடி கிளியே!
கொடுக்குள்ள தேள்குணமாய்
கொண்டவர்தான் வஞ்சக எண்ணமடி
தடுத்துதான் விடவேண்டும்
தங்கமே தருவதென்றாலும் கிளியே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT