கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: பேராசிரியை.செ.சுதா ராமு

கவிதைமணி

தாயின் கருவறையில்
துணையாய் வந்த தனிமையிடம்
என்னை ஏன்
இவ்வளவு பிடிக்குமென்று கேட்டேன்?

கருவறையில் உருவான உன்னை
கழிவறையில் விட்டு
உன் தாய் போனபோது
நீ என்னுடன்தான் பயணித்தாய்!

சமூக வீதியில்
சந்தைப்பொருளாகாமல்
தன்னம்பிக்கையோடு போராடி
தலைநிமிர்ந்து நீ நின்றபோது
உன்னருகில் நான்!
நீ வளர்ந்த போதும்;தளர்ந்தபோதும்;
என்னிடம் தான் புலம்புவாய்!

அதனால் தான்
உன்னைப்பிடிக்கிறது என்றது
நான் பிறந்தபோது
என்னருகில் 
மிகநெருக்கமான தனிமை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT