கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: சரஸ்வதி ராசேந்திரன்

கவிதைமணி

உன் கண்கள் செய்யும் யுத்தத்தால்
நான்  புண்பட்டு நிற்கின்றேன்
மேனி வில்லை வளைக்காமல்
மோகக் கணை தொடுக்கின்றாய்

வித்தை செய்யும் வித்தகியே என்
சித்தம் தடுமாறுது உன் விழி வீச்சில்
குத்தமில்லை காதலென சொல்லிவிடு என்
சித்தம் சீர் படும் சிந்தையும் செயல்படும்

வஞ்சி என்னை வதைத்தது போதும்
மிஞ்சி என்னை சிதைத்தது போதும்
நெஞ்சில் ஈரம் கொண்டு வந்திடு
கெஞ்சுகிறேன் யுத்தத்தை நிறுத்தி
என்னை உன் மனதால் கைதுசெய்துபோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT